Nagaratharonline.com
 
தேவகோட்டை நகரத்தார் காவடி கட்டும் நிகழ்ச்சி  Jan 12, 11
 
தைப்பூசத்திற்கு பழனி எடுத்து செல்வதற்காக தேவகோட்டை நகரத்தார் சார்பில் நேற்று காவடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக நகர பள்ளிக்கூடத்தில் விநாயகர், முருகன் சன்னதி முன் வைத்து காவடி கட்டினர். இங்கு 37 காவடிகள் வரை கட்டப்பட்டன. காவடிக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பஞ்சாமிருதம் தயாரிக்க வழங்குவதற்காக காவடியில் சர்க்கரை கட்டினர். காவடியுடன் எடுத்து செல்லும் "வைரவேலுக்கு' பூஜை நடந்தது. இன்று சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். நாளை (ஜன.,13) தேவகோட்டையில் இருந்து காவடி புறப்பாடு நடக்கும்.

source : Dinamalar