Nagaratharonline.com
 
பொங்கல் சிறப்பு ரயில்: நாளை முன்பதிவு  Jan 6, 11
 
சென்னை, ஜன. 6: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெரிசலைச் சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதன் விவரம்:

சென்னை சென்ட்ரல்- திருநெல்வேலி ஏழைகள் ரதம் விரைவு ரயில் (06009): அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து 12-ம் தேதி இரவு 7.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.35 மணிக்கு நெல்லைக்கு சென்று சேரும்.

திருநெல்வேலி- சென்னை சென்ட்ரல் ஏழைகள் ரதம் விரைவு ரயில் (06010): அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து 13-ம் தேதி பிற்பகல் 2.55-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை விரைவு ரயில்-(மயிலாடுதுறை வழி) (06011): இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து 11-ம் தேதி இரவு 9.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்று சேரும்.

செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (06012) ( விருத்தாச்சலம், எழும்பூர் வழி): இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து 12-ம் தேதி பிற்பகல் 2.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி விரைவு ரயில்-(மயிலாடுதுறை வழி) (06103): இந்த ரயில் எழும்பூரில் இருந்து 15-ம் தேதி இரவு 10.45-க்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

திருநெல்வேலி- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (06104) ( விருத்தாச்சலம் வழி): இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து 16-ம் தேதி பிற்பகல் 2.55-க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

நாளை முன்பதிவு: இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய சனிக்கிழமை (8-ம் தேதி) முதல் முன்பதிவு தொடங்குகிறது.


source : Dinamani