Nagaratharonline.com
 
வெறிச்சோடிய புதுவயல் பஸ் ஸ்டாண்ட் : பயணிகள் அவதி  Oct 22, 09
 
குண்டும், குழியுமாக இருப்பதால் பஸ்கள் உள்ளே வராமல் புதுவயல் பஸ் ஸ்டாண்ட் வெறிச் சோடி உள்ளது. மெயின் ரோடு வழியே பஸ்கள் செல்வதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இங்கு கடந்த 2003 ல், 30 லட்ச ரூபாயில் கடைகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் துவக்கப்பட்டது. பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, திருவாரூர், நாகூர், திருத்துறைப்பூண்டி உட்பட வெளியூர், தட்சக்குடி, நெம் மேனி, மித்ராவயல், ஏம்பல், ஆவுடையார்கோவில் டவுன் பஸ்கள் வந்து சென்றன. சில ஆண்டுகளில் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. பஸ்கள் உள்ளே செல்லாமல் பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கி விடுகின்றனர். அங்கு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உருவாகி உள்ளது. பஸ்கள் உள்ளே வந்து செல்லும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்படும் என அப்போதைய கலெக் டர் சித்திக் உறுதி அளித் தார். அவர் மாறுதலுக்கு பின் எந்த முன்னேற்றமும் இல்லை.தற்போது நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

source : dinamalar 22/10/09