Nagaratharonline.com
 
மின்கட்டண அறிவிப்பு - கீழச்சிவல்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்  Jan 5, 11
 
திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நிர்வாக காரணங்களால் கடந்த டிசம்பர் மாதம் மின்பயனீடு கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் இந்திரா நகர், கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, அச்சரம்பட்டி, அம்மாபட்டி, சிறுகூடல்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மின்நுகர்வோர், கடந்த நவம்பர் மாதம் செலுத்திய மின்கட்டண தொகையை ஜன.15ம் தேதிக்குள் செலுத்துமாறு உதவி மின்பொறியாளர் ராமநாதன் அறிவித்துள்ளார்.