Nagaratharonline.com
 
தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் துரிதம்  Jan 3, 11
 
தாம்பரம் சானடோரியத்தில், மினி பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.தாம்பரம் சானடோரியத்தில் சுகாதாரத்துறைக்கு சொந்தமான, 3.77 ஏக்கர் நிலத்தில் 4.95 கோடி ரூபாய் செலவில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது.

இதில், 19 பஸ் வே, 31 கடைகள், பயணிகள் தங்கும் விடுதி, பொருட்கள் வைக்கும் அறை, டிரைவர்கள் தங்கும் அறை, நேர காப்பாளர் அறை, உணவு விடுதி, கழிப்பிடங்கள் ஆகியவை அமையவுள்ளன.ஒராண்டில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதே போன்று பணிகள் தொடர்ந்து நடந்தால் திட்டமிட்டப்படி மினி பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நிலவி வரும், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.


source : Dinamalar