Nagaratharonline.com
 
நெற்குப்பை நகரத்தார் சங்கம் ஆண்டு விழா  Jan 3, 11
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் 19 ம் ஆண்டு விழா சென்னையில் பாடி, மோகன் கார்டனில் 2 /1 /11 ஞாயீற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பாக நடைபெற்றது

உப தலைவர் திரு. முத்துபழனியப்பன் வரவேற்புரை வழங்க செயலாளர் திரு. நடராஜன் ஆண்டு அறிக்கை வாசிக்க, சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு. தியாகராஜன் மற்றும் திரு பனையப்பன் இருவரும் சதுரங்க விளையாட்டில் Grand Master பட்டம் பெற்ற SP .சேதுராமனை பாராட்டி சிறப்பு செய்தார்கள். காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தின் முன்னாள் தலைவர் திரு. PL அடைக்கப்ப செட்டியார் சிறப்புரை ஆற்றினார்கள். செட்டி நாட்டின் சமையல் கலைஅரசி திருமதி ரேவதி சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று , சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ,வினாக்களுக்கு விளக்கம் அளித்தார்கள்
இணை செயலாளர் திரு கௌதமன் நன்றிஉரை ஆற்றினார்.

காலையில் எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் விளையாட்டுப்போட்டி, சிறுவர்கள் தனித் திறமை வெளிக்காட்டுதல், செஸ் போட்டிகள் நடைபெற்றன. பரிசுகள் வழங்கப்பட்டன .

காலை உணவு, மதிய விருந்து மாலை தேநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது
2011 - 2012 ம ஆண்டிற்கான நிர்வாகிகள் ஏகமனதாக கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் - திரு,PL A .லக்ஷ்மணன்,
உபதலைவர் -திரு M . அருணாசலம்.
செயலாளர் - திரு MR .பெரியகருப்பன்,
இணை செயலாளர்கள் : திரு L . ராமநாதன் மற்றும் திரு சுந்தர்
பொருளாளர் - திரு. P .பனையப்பன்.