Nagaratharonline.com
 
நகரத்தார் ஆண்கள் குருபீடமான பாதரக்குடி ஆதீனத்தில் பாராட்டு விழா  Jan 3, 11
 
காரைக்குடி அருகே பாதரக்குடியில் நகரத்தார் ஆண்கள் குருபீடமான பாதரக்குடி ஆதீனத்தில் ஆதீன குரு பிறந்தநாள் விழா மற்றும் பொதுநல சேவை புரிந்தோருக்கு பாராட்டுப் பட்டம் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

பாதரக்குடி ஆதீனத் தலைவர் ரவீந்திர சுவாமிகளின் 57-வது பிறந்தநாள் விழாவில் நீலா, ராமநாராயணன் ஆகியோர் இறைவணக்கம் பாடினர். சுவாமி அருளுரை வழங் கினார். பின்னர் மேலைச்சிவபுரி தொழிலதிபர் ஞானம் செட்டியாரின் பொதுநல சேவை யைப் பாராட்டி அருட்பணி அண்ணல் எனும் பட்டத்தை ரவிந்திர சுவாமிகள் வழங்கி பாராட்டிப் பேசினார்.

கவிஞர் அரு.சோமசுந்தரம் வரவேற்றார். துலாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், பழநி பாதயாத்திரை குருநாதர் பழநியப்பச் செட்டியார், தேனி தொழிலதிபர் உடையப்பச் செட்டியார், கவிஞர் அப்பச்சி சபாபதி, வழக்கறிஞர் பழ.ராமசாமி, பழனியப்பன், எம்.எஸ் ராமநாதன், கே.முத்து உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர்.ஜமீன்தார் நாராயணன் செட்டியார் நன்றி கூறினார்.


source : Dinamani