Nagaratharonline.com
 
ஒக்கூரில் கந்த சஷ்டி விழா  Oct 20, 09
 
சிவகங்கை, அக்.20: ஒக்கூர் ஸ்ரீசரிவர்ண விநாயகர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விழா துவங்கியது. தொழிலதிபர் ராமனாதன் செட்டியார் விழாவைத் துவக்கி வைத்தார். சிந்தாமணி செட்டியார், சம்பத் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முருகன் காவடி சிந்து, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் ஆகியவை பாடப்பட்டன. கோயிலில் தினமும் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், மாப்பொடி, பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியம் உள்பட 12 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

தினமும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் அக்.24 (சனிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று பக்தி சொற்பொழிவு நடைபெறும்.


source :Dinamani 21/10/09