Nagaratharonline.com
 
தலைமை இன்றி தள்ளாடும் கல்லல் போலீஸ் ஸ்டேஷன்  Dec 20, 10
 
கல்லல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால், வழக்கு விசாரணையில் தேக்கம் நிலவுகிறது. இதன் கீழ் 75 கிராமங்கள் உள்ளன. ஆனால் போதிய போலீசார் இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த இரட்டை கொலையில் இன்னும், மர்மம் விலகவில்லை. ஒரு ஆண்டில் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டதே, இதற்கு காரணம். இதில் சிலர் பணிக்கு வந்த உடனே நீண்ட விடுப்பில் சென்று, பிறகு மாறுதலாகிவிட்டனர். பல வழக்குகள் விசாரணை நிலையிலே உள்ளன. புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் தலைமையில் கொலைகள் பற்றி விசாரிக்க தனிப்படை அமைப்பதும், சில நாட்களில் மாறுதலாகி செல்வதும் மர்மமாகவே உள்ளது. போலீசார் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால், இரவு ரோந்து மறந்து போனது. உடனடியாக இங்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க, ராஜசேகரன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்

source : Dinamalar