Nagaratharonline.com
 
நகரத்தார் யாத்திரை  Dec 20, 10
 
ஆன்மிக எழுச்சிக்காக பாதயாத்திரை மேற்கொண்ட 96 ஊர் நகரத்தார் குழுவினருக்கு, பிள்ளையார்பட்டியில் பாராட்டு விழா நடந்தது. குழு தலைவர் தேனப்பன் வரவேற்றார். செயலாளர் மாணிக்கம் அறிக்கை வாசித்தார். அரு.சோமசுந்தரன் தலைமை வகித்தார். கடந்த 1 ம் தேதி பிள்ளையார்பட்டியில் இருந்து துவங்கிய 750 கி.மீ., யாத்திரை நேற்று நிறைவடைந்தது. உறுப்பினர்கள் ஏ.ஆர். பழனியப்பன், சாத்தப்பன், ராமநாதன், செந்தில்குமரப்பன், இந்தியன் வங்கி மேலாளர் முத்தையா, முன்னாள் மேலாளர் அருணாச்சலம், கயிலைமணி நீலா, தையல்நாயகி பங்கேற்றனர். உறுப்பினர் ராமையா நன்றி கூறினார்

source : Dinamalar