Nagaratharonline.com
 
திருக்குறள், ஆத்திச்சூடி சொல்லி அசத்தும் காரைக்குடியை சேர்ந்த 2 வயது சிறுமி  Dec 16, 10
 
மதுரை, : காரைக்குடியை சேர்ந்த 2 வயது சிறுமி மெய்யம்மை திருக்குறள், ஆத்திச்சூடி சொல்லி அசத்துகிறார்.
காரைக்குடி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி மெய்யப்பன், வடிவாம்பாள். இவர்களது 2 வயது மகள் மெய்யம்மை. இவர் தற்போது தனது மழலை மொழியில் திருக்குறளின் முதல் அதிகாரம், ஆத்திச்சூடி, நம் நாட்டுத் தலைவர்களின் பெயர்கள், வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள், முக்கனிகள், சிவபுராணத்தின் முதல் இரண்டு வரிகள், தேசிய கொடியின் வண்ணங்கள், தமிழ் மற்றும் ஆங்கில பாடல்கள், விலங்குகளின் அழுகைகள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள் என அனைத்தையும் கேட்பவர்களிடம் சொல்லி வருகிறார்.
இவர் காரைக்குடியில் ரோட்டரி சங்கம் உட்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இது குறித்து அவரது அம்மா வடிவாம்பாள் கூறியதாவது:
‘5 மாதத்தில் இருந்து அவளிடம் பேசிக்கொண்டே இருப்பேன். பேசும் போது பாட்டு பாடுவது, நாட்டுத் தலைவர்களின் பெயர், தேசிய கொடியின் வண்ணங்கள் உட்பட பல விஷயங்களை பேசுவேன். 15 மாதம் ஆகியதும் நான் சொல்லிக் கொடுத்தவற்றை திரும்ப என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள். இதனைத் தொடர்ந்து எனக்கு சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் அதிகரித்தது. வீட்டில் பெரிய அளவில் படங்கள், வண்ணங்கள், திருக்குறள் புத்தகம், திருவள்ளுவர் படம், வடிவங்கள், தேசிய மலர், விலங்கு, பறவை என ஒவ்வொன்றாக காட்டி சொல்ல, சொல்ல ஆர்வமாக சொல்லி வருகிறாள். கற்றுக் கொடுக்கும் எதனையும் விரைவாக கற்றுக் கொள்கிறாள்.

Source:Dinakaran