Nagaratharonline.com
 
திருப்பத்தூர் தபால் அலுவலகத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு  Dec 16, 10
 
திருப்பத்தூர், டிச. 15: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தபால் அலுவலகத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு குறித்து அஞ்சல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி திருப்பத்தூர் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில்வே நேரடி முன்பதிவு மற்றும் பதிவு ரத்து ஆகியவை செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இச்சேவையினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி தலைமை தபால் நிலைய அஞ்சல் அலுவலக அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். இங்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்தால் பயணத்தின் போது எந்த ஆவணங்களும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source:Dinamani