Nagaratharonline.com
 
பாகனேரியில் போன் இணைப்புகள் துண்டிப்பு  Dec 4, 10
 
பாகனேரியில் டெலிபோன்கட்டணம் செலுத்தியும், இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இங்கு 400 சந்தாதாரர்கள் இணைப்பு பெற்றுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக, பில் வழங்கப்படவில்லை. இதனால், சிவகங்கை சென்று தொகையை கட்டினர். இம்மாதம் வந்த பில்லிலும் ஏற்கனவே கட்டிய தொகையை கழிக்கவில்லை. இதை கட்டாத 200க்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டித்து விட்டனர். பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஒருவர் கூறுகையில்,"" கிராமங்களில் கட்டணத்தை, தபால் அலுவலகத்தில் கட்டுகின்றனர். அங்கு கம்ப்யூட்டர் மயமாகவில்லை. அங்கு செலுத்தும் கட்டண தொகை எங்களுக்கு வர ஒரு வாரம் ஆகும். இதனால், துண்டிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது,'' என்றார்.


source : Dinamalar