Nagaratharonline.com
 
தேவகோட்டையில் "டெங்கு' காய்ச்சல்  Nov 30, 10
 
தேவகோட்டையில் "டெங்கு' காய்ச்சல் பரவிவருவதால் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவிகள் இன்றி நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு, தொடர் மழை காரணமாக, தெருக்களில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 15பேர் இந்நோய் பாதித்து, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால், இப்பகுதியினர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையான ரத்த பரிசோதனை கருவி உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், நோய் பாதித்த ஏழை, நடுத்தர குடும்பத்தினர் சிரமத்தில் உள்ளனர்

source : Dinamalar