Nagaratharonline.com
 
புதிய ஆட்டோ சேவையைஅறிமுகப்படுத்தியது டி.வி.எஸ்  Nov 27, 10
 
எந்ந நேரத்திலும், ஆட்டோ சர்வீஸ் செய்து கொள்வதற்கு ஏற்ப, டி.வி.எஸ்., நிறுவனம் தனது சேவையை, தொடங்கியுள்ளது.இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், தயாரித்து வழங்கும் நிறுவனமான டி.வி.எஸ்., தனது மூன்று சக்கர வாகன வாடிக்கையாளர்களின், அவசரகால தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், நல்ல சர்வீஸ் எந்த நேரத்திலும் கிடைப்பதற்கு ஏற்ற வகையில் புதிய சேவையை நேற்று சென்னையில் துவக்கியது.



இந்த சேவையை தொடங்கி வைத்த டி.வி.எஸ்., நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது: சமூகத்திற்கு சேவையாற்றும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவையாகும். தலைசிறந்த கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் கொண்ட ஆட்டோக்களை சென்னையில் முக்கிய இடங்களில், நிறுத்தி வைக்கவிருக்கிறோம். இதன் மூலம் எந்த நேரமும் தடையில்லா சேவையை வழங்க முடியும்.இவ்வாறு ஸ்ரீனிவாசன் பேசினார்.

source : Dinamalar