Nagaratharonline.com
 
துபை நிறுவனத்துக்கு பொறியாளர்கள் தேர்வு  Nov 26, 10
 
துபையில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு பொறியாளர் பிரிவுகளில் பணியாற்ற டிசம்பர் 3-ல் சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பல்வேறு தொழிற்பிரிவுகளில் பணி அனுபவம் பெற்ற பணியாளர்களை அவர்களின் தகுதிக்கு ஏற்ப பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி

வருகிறது.

துபையில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு 33 வயதிற்குட்பட்ட பி.இ., பி.டெக்., தேர்ச்சி பெற்ற எலெக்ட்ரிகல், பிளம்பிங் பிரிவு, பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 3-ல் சென்னையில் நடைபெற உள்ளது.

விவரங்களுக்கு: 044 - 24464268, 24464269

source : Dinamani