Nagaratharonline.com
 
செம்பனூரில் வி.ஏ.ஓ., இல்லை  Nov 26, 10
 
கல்லல் : செம்பனூரில் கடந்த ஒரு ஆண்டாக வி.ஏ.ஓ., இல்லாமல், கிராமத்தினர் அவதிப்படுகின்றனர். இக்கிராமத்தின் கீழ் மீனாட்சிபுரம், கூமாச்சிபட்டி, நெற்புகப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வி.ஏ.ஓ., இல்லாததால், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர். கிராம கணக்குகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. கடந்த ஆறு மாதங்களாக யாரும் பொறுப்பேற்கவில்லை. கூடுதல் பொறுப்பு அளித்தால், விடுப்பில் சென்று விடுகின்றனர். இதனால் மாணவர், கிராமத்தினர் சான்றிதழ் பெற முடியாமல் அலைபாய்கின்றனர். விவசாயிகள் பட்டா, அடங்கல் கிடைக்காமல் தவிக்கின்றனர்.அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வி.ஏ.ஓ., நியமிக்க வேண்டும்.

source : Dinamalar