Nagaratharonline.com
 
சொக்கநாதபுரம் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: நகைகள் தப்பின  Nov 24, 10
 
சொக்கநாதபுரம் கூட்டுறவு வங்கி கதவை உடைத்து மர்மநபர்கள் கம்ப்யூட்டர், லேப் டாப்பை கொள்ளையடித்து சென்றனர். லாக்கர் பூட்டை உடைக்க முடியாததால், பல லட்ச ரூபாய் நகை, பணம் தப்பியது. இங்குள்ள கத்தப்பட்டு தொடக்க கூட்டுறவு வங்கி அருகே ரேஷன், உரக்கடைகளும் செயல்படுகின்றன. கடந்த 23ம் தேதி மாலை வங்கி செயலாளர் ராஜ்குமார் (52), பூட்டிவிட்டு சென்றார். அன்று நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள், லாக்கரை உடைக்க முயற்சித்தனர். அதை உடைக்க முடியாததால், ஆத்திரத்தில் லேப் டாப், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர். லாக்கர் உடைக்க முடியாமல் போனதால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. மறுநாள் வங்கிக்கு வந்த செயலாளர், திருட்டு நடந்திருப்பதை அறிந்து, மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். விரல்ரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், ரேகைகளை சேகரித்தார்.

source : Dinamalar