Nagaratharonline.com
 
பி.எஸ்.என்.எல்., சிறப்பு திட்டம் : வாடிக்கையாளர் ஆர்வம்  Nov 22, 10
 
"என் நண்பன் சூப்பர்' எனும் பி.எஸ்.என்.எல்., "சிம் கார்டு' திட்டத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் சந்தாதாரர்களுக்கு, மொபைல் போன் "சிம் கார்டு' வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏதாவது ஒரு பி.எஸ்.என்.எல்., "லேண்ட் லைன்' எண்ணுக்கும், 30 காசு கட்டணத்தில் இரு மொபைல் போன்களுக்கும் இலவசமாக பேசலாம். இச்சலுகைகள் சந்தாதாரர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



இது குறித்து பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஒருவர் கூறுகையில், ""இத்திட்டத்திற்கு சந்தாதாரர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தில் 200 எஸ்.எம்.எஸ்.., கள் இலவசம். இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை 20 காசு கட்டணத்தில் பேசலாம். வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் "சிம் கார்டு' பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தொலைத்தொடர்பு வட்டத்தில் இதுவரை 5,000 க்கும் மேற்பட்டவர்கள் "கார்டு' கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,'' என்றார்.


source : Dinamalar