Nagaratharonline.com
 
காரைக்குடியில் "வேங்கை' படப்பிடிப்பு சிரமம்  Nov 20, 10
 
போலீஸ் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக நடந்த படப்பிடிப்பால், காரைக்குடியில் சிரமம் ஏற்பட்டது. டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், தமன்னா நடிக்கும் "வேங்கை' படப்பிடிப்பு காரைக்குடியில் நேற்று காலை துவங்கியது.

போக்குவரத்து மிகுந்த செக்காலை ரோட்டில் இரு புறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. இவர்களின் வாகனங்கள் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் இதில் சிக்கி, உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பரிதவித்தன. மாணவர்கள் சிலர் பள்ளியை "கட்" அடித்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர்.அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதோடு, "பீக் அவர்ஸ்' ல் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் போலீசார் "டென்ஷன்' ஆகினர். ரத்து செய்யும் படி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை எச்சரித்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினர் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர் அனுமதிக்காததால், ரத்து செய்யப்பட்டது. ராஜசேகரன் எஸ்.பி., யிடம் அனுமதி பெற்று, இரண்டு மணி நேரத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கியது.

source : Dinamalar