Nagaratharonline.com
 
வள்ளல் டாக்டர் ஆர்எம். அழகப்பச் செட்டியாருக்கு சிலை அமைக்க ஏற்பாடு  Nov 19, 10
 
காரைக்குடி, நவ. 18: கல்வி வள்ளல் டாக்டர் ஆர்எம். அழகப்பச் செட்டியாருக்கு காரைக்குடி-கோட்டையூர் ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அருகே சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சிலை அமைப்புக் குழு ஆலோசகர் பேராசிரியர் அய்க்கண் தெரிவித்தார்.

அழகப்பர் பிறந்த ஊர் கோட்டையூரிலிருந்து இன்றைய கல்லூரி வளாகங்கள் அமைந் துள்ள பகுதிக்குத் திரும்பும் இடத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் முழு உருவ வெண்கலச்சிலை அமையவிருக்கிறது.

இச் சிலையை நிறுவுவதற்காக அப் பகுதியைச் சேர்ந்த பாரி நகர் நலச் சங்கம் தீர்மானித்து, அதற்காக தனியாக வள்ளல் அழகப்பர் சிலை அமைப்புக் குழுவை ஏற்படுத்தி, அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இக் குழு மேற்கொண்ட முயற்சியால் கடந்த 1.10.2010 தேதியிட்ட தமிழக அரசின் அனுமதி மற்றும் அரசாணையும் கிடைத்துள்ளது என்றார் அய்க்கண்.

Source:Dinamani