Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 21ல் மூன்று விழாக்கள்  Nov 18, 10
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நவ. 21ல் கார்த்திகை தீபம், பவுர்ணமி கிரிவலம், குருபெயர்ச்சி மூன்று விழாக்கள் நடக்கிறது.அன்று காலை கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். பவுர்ணமியை முன்னிட்டு, மாலை 6.30 மணிக்கு கிரிவலம் நடக்கிறது. குருபெயர்ச்சியை முன்னிட்டு, கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியாகும்.


source : Dinamalar