Nagaratharonline.com
 
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் நாளைமுதல் மண்டல பூஜை  Nov 15, 10
 
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலைப்போல இங்கும் பிரம்மோற்சவம், மகரஜோதி ஆகிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவ காலத்தில் வெள்ளி, தங்க ரத உலா நடைபெறும்.

2010-ம் ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை 41 நாள்கள் நடைபெறவுள்ளது. டிசம்பர் 13 வரை லட்சார்ச்சனை நடைபெறும்.

டிசம்பர் 22 முதல் 27 வரை 6 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்நாள்களில் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

மண்டல பூஜை நாள்களில் தினமும் மாலை நேரத்தில் பக்தி பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

விரதமிருந்து இருமுடி எடுத்துவரும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி காலை 7 முதல் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்யலாம்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி, அறங்காவலர் ஆர். முத்தையா ஆகியோர் செய்து வருவதாக ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் அறக்கட்டளையின் கௌரவச் செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.


source : Dinamani