Nagaratharonline.com
 
ராயபுரம் - பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம் நகை பறிப்பு  Nov 15, 10
 
புதுக்கோட்டை, நவ. 14: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

திருமயம் அருகேயுள்ள ராயபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி லட்சுமி (55). இவர், தனது கணவருடன் புதுகை தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்கு வந்தார்.

பின்னர், ஊர் திரும்புவதற்காக புதுகை பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது, பேருந்திலிருந்து கீழே இறங்கிய அடையாளம் தெரியாத நபர், லட்சுமி அணிந்திருந்த 5.5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


Source:Dinamani