Nagaratharonline.com
 
ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை திருவிழா 22-ந்தேதி  Nov 13, 10
 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

விழாவையொட்டி அன்று காலை 9.05 மணிக்கு நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறார்.

பின்னர் இரவு 8மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள், 2-ம்புறப்பாடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனையை கண்டளுருகிறார். பின்னர் நம்பெருமாள் திருக்கைத்தலசேவையுடன் மூலஸ்தானம் சேருகிறார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் வருகிற 17-ந்தேதி கைசிக ஏகாதசி திருநாள் விழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. பின்னர் 2-ம் புறப்பாடு இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. பட்டர் சுவாமிகள் கைசிக புராணம் வாசிக்கும் நிகழ்ச்சி இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2மணி வரை நடக்கிறது.

வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 18-ந்தேதி காலை 10 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற சன்னதிகளில் இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.


source : Dinamani