Nagaratharonline.com
 
அரியக்குடி : கார்த்திகை விளக்கு தயாரிப்பு பணி மும்முரம்  Nov 13, 10
 
திருக்கார்த்திகை விழாவுக்காக, காரைக்குடி அருகே அரியக்குடியில் பித்தளை விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது.அரியக்குடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக பித்தளை விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குத்து விளக்கு, கார்த்திகை, லட்சுமி, யானை விளக்குகள், கைமணி, கோயில் மணி, சுவாமி சிலைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் விளக்குகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. கேரளா, திருச்சி, கோவை, சென்னைக்கு விளக்குள் அனுப்பப்படுகின்றன. தற்போது கார்த்திகை விளக்குகள் அதிகளவு தயாரிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ள கோயில்களில் இவ்விளக்குகள் அதிகளவில் விற்பனையாகின்றன.


source : Dinamalar