Nagaratharonline.com
 
ஆறாவயல் பள்ளிக்கு அமெரிக்க பேராசிரியை வருகை  Nov 12, 10
 
தேவகோட்டை, நவ. 11: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு அமெரிக்க பேராசிரியை பாடம் நடத்தினார்.

இங்கு நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறனை மேப்படுத்தும் பயிற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் பாங்க் ஸ்டீர்ட் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியை பெர்னட் ஆனந்த் கலந்தகொண்டு பயிற்சியளித்தார்.

அவருடன் அவரது கணவர் வினோத் ஆனந்த் கலந்துகொண்டார். கற்பித்தல் முறையில் காலத்திற்கேற்ப புதிய உத்திகளைக் கடைபிடிக்கவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

மாணவர்கள் பாடம் கற்பதில் தனி ஆர்வத்தை ஏற்படுத்துவது, குழு விவாதம் மூலம் புரிய வைப்பது, ஆராய்ச்சி மனப்பான்மை மூலம் திறனை மேம்படுத்துவது குறித்து அவர் பேசினார். முன்னதாக கணித ஆசிரியை ஜீவிதா வரவேற்றார். அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


Source:Dinamani