Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி திருக்கோயில்: Nov 11 ஏகதின லட்சார்ச்சனை  Nov 10, 10
 
கண்டவராயன்பட்டி, நவ. 9: சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் 5-ம் ஆண்டு கந்தர் சஷ்டி லட்சார்ச்சனை வியாழக்கிழமை (நவ.11) நடைபெறுகிறது.

கண்டவராயன்பட்டி தெ.சி.நா. குடும்பத்தாருக்குச் சொந்தமான இக்கோயிலில், அருள்மிகு வலம்புரி விநாயகருக்கும், தண்டாயுதபாணிக்கும் வியாழக்கிழமை காலை 10-30 மணி முதல் மாலை 6 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு முருகன் அருளாடி கண்டனூர் சாமியாடிச் செட்டியார் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு சே. சொக்கலிங்கம் 94436 09700, ராம. தேனப்பன் 0435 2425409, கோயில் 9443648945 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Source:Dinamani