Nagaratharonline.com
 
மதகுபட்டி, கல்லலில் பல்லாங்குழி ரோடுகள்  Nov 8, 10
 
கல்லலில் காவிரி குடிநீர் திட்டத்திற்கு மதகுபட்டி, இந்திராநகர், சர்ச்ரோடு பகுதிகளில் பெரிய குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து ஒரு ஆண்டாகி விட்டது. ஆனால் ரோடு இருந்த சுவடே தெரியவில்லை. விநாயக நகர், காவலர் குடியிருப்பு வீடுகளில் மழை நீர் புகுந்து விடுகிறது. பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பணியின் போது துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. சேறும், சகதியுமான ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.

source : Dinamalar