Nagaratharonline.com
 
காரைக்குடி: ரயில்வேக்கு தொழில் வணிக கழகம் நன்றி  Nov 1, 10
 
காரைக்குடி, அக். 31: சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு திருச்சி, காரைக்குடி வழியாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ள ரயில்வேத் துறைக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், காரைக்குடி தொழில் வணிகக் கழகம் சார்பில் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சென்னை-காரைக்குடி-ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் ஒன்றை தீபாவளிப் பண்டிகைக்காக இயக்கக் கோரி ஃபேக்ஸ் மூலம் வேண்டு கோள் மனு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, நவ. 3-ந் தேதி சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்தைச் சென்றடையவும், நவ. 7-ந் தேதி இந்தச் சிறப்பு ரயில் ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் சென்னை திரும்பும் வகையிலும் இயக்கப்படவிருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதற்காக ரயில்வே பொது மேலாளர், சிறப்பு ரயில் விட துணைபுரிந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் என். சுந்தரம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சார்பில் அதன் செயலர் சாமி. திராவிடமணி நன்றி தெரிவித்துள்ளார்.


Source: Dinamani

Nov 01,2010