Nagaratharonline.com
 
ஐஓபி ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா  Nov 1, 10
 
புதுக்கோட்டை, அக். 29: புதுக்கோட்டை மாவட்டம், இருந்திராபட்டி கிராமத்தில் இலுப்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை சார்பில் ஸ்மார்ட் அட்டை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, காரைக்குடி முதுநிலை மண்டல மேலாளர் ராமதாசு தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசுகையில், ""ஸ்மார்ட் கார்டு மூலமாக கிராம மக்கள் தங்களின் வீட்டு வாசலைத் தேடி வரும் வங்கிச் சேவையினை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்துவரும் பயனாளிகள் இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் மூலம் தங்களது கூலியை வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த திட்டத்தை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

விழாவில், இருந்திராப்பட்டி ஊராட்சித் தலைவர் கீதா அண்ணாதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை தமிழரசன், வென்ச்சர் தொண்டு நிறுவனத் திட்ட இயக்குநர் டேனியல்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுகை முன்னோடி மேலாளர் எஸ். சுதாகர், தலைமையாசிரியர் மகாதேவி, வங்கியின் கடன் பிரிவு அலுவலர் வினோத்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக கிளை மேலாளர் வரதராஜன் வரவேற்றார். நிறைவில், வங்கியின் விவசாய தொழில்நுட்ப அலுவலர் இம்ரான் நன்றி கூறினார்.


Source: dinamani
nov 1, 2010