Nagaratharonline.com
 
துளாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை விழா  Oct 11, 09
 
காரைக்குடி, அக்.11: காரைக்குடி அருகே துளாவூர் நகரத்தார் பெண்களின் உபதேச குருபீடத்தில் துலாவூர் ஆதிகுரு நிரம்பஅழகிய தேசிக சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆன்மிகப் பேரவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துலாவூர் ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் முன்னிலை வகித்துப்பேசினார்.

தேனி உடையப்பச்செட்டியார் தலைமை வகித்துப் பேசினார். காசிநாதன் இறைவணக்கம் பாடினார். கவிஞர் ஆண்டியப்பச் செட்டியார் வரவேற்றார்.

கவிஞர் அரு. சோமசுந்தரன் தொடக்கி வைத்துப் பேசினார். விழாவில் தேவகோட்டை சொ.மெ.பழ. சோமசுந்தரம் செட்டியாருக்கு துலாவூர் ஆதீனகர்த்தர் "அறமனச் செம்மல்' என்ற விருது வழங்கினார்.

பாதரக்குடி ஆதீனகர்த்தர் ரவீந்திர சுவாமிகள், சபாபதி, சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தேவகோட்டை ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார் நன்றி கூறினார்.

source : Dinamani 12/10/09