Nagaratharonline.com
 
திருச்சி - சிங்கப்பூர் இடையே நவ. 1-ல் விமான சேவை தொடக்கம்  Oct 30, 10
 
சிங்கப்பூர் - திருச்சி - சிங்கப்பூர் இடையே டைகர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நவ. 1-ம் தேதி விமான சேவையைத் தொடங்கவுள்ளது.

இந்தச் சேவை வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய 4 நாள்களில் அளிக்கப்படவுள்ளது. இந்த 4 நாள்களிலும் இரவு 11.10 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் நள்ளிரவு 12.10 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும்.

இந்தச் சேவை திருச்சியிலிருந்து நேரடியாக அளிக்கப்படவுள்ளது.

ஏற்கெனவே, ஏர் இந்தியா நிறுவனம் திருச்சி - சிங்கப்பூர் இடையே சேவை அளித்து வரும் நிலையில், தற்போது இரண்டாவதாக சிங்கப்பூரை சார்ந்த டைகர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விமான சேவையை அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source : Dinamani