Nagaratharonline.com
 
ராமேசுவரம் காசி பாத யாத்திரைக் குழு அமைப்புக் கூட்டம்  Oct 29, 10
 
தேவகோட்டை, அக். 28: ராமேசுவரம் காசி ஐந்தாவது பாத யாத்திரைக் குழு கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் பாத யாத்திரைக் குழு சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைவர் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்தார். அமைப்பாளர் காசிநாதன் வரவேற்றார். ஜமீன்தார் சோமநாராயணன் செட்டியார் தொடக்க உரையாற்றினார். இந்த குழுவை வழிநடத்தி செல்லும்தட்சிணாமூர்த்தி அறிமுக உரையாற்றினார். சேவுகன் கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் வாழ்த்துரை வழங்கினார். முதன்முதலாக 1983-ல் அரு. சோமசுந்தரன் தலைமையில் முதல் குழு புறப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஐந்தாவது குழு 2011 பிப்ரவரி மாதம் ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு நான்கு மாதங்கள் 3000 கிலோ மீட்டர் தொலைவை நடந்து சென்று காசி விசுவநாதரை வணங்கி கங்கையில் குளித்துவிட்டு தேவகோட்டை திரும்பி வருவார்கள் என அரு. சோமசுந்தரன் தெரிவித்தார்

Source:Dinamani