Nagaratharonline.com
 
நற்சாந்துபட்டியில் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி போராட்டம்  Oct 28, 10
 
திருமயம் வட்டத்துக்குள்பட்ட நற்சாந்துபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம், கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நற்சாந்துபட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாகச் செல்வதற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் தயங்குகின்றனர். மேலும், டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் எதிரே உள்ள குளத்தை அசுத்தம் செய்கின்றனர். எனவே, கடையை மாற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலர் எஸ். சுப்புலட்சுமி தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

source : Dinamani