Nagaratharonline.com
 
காசி, புவனேஸ்வர் ரயில்கள் சிவகங்கையில் நிற்கும்  Oct 28, 10
 
நவ., 1ம் தேதி முதல் ராமேஸ்வரம்- காசி, புவனேஸ்வர் ரயில்கள், சிவகங்கையில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. புண்ணிய தலங்களான ராமேஸ்வரம், காசியை இணைக்கும் வகையிலும், புவனேஸ்வருக்கும், கடந்த ஆகஸ்ட் முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை ரயில்வே சந்திப்புகளில் மட்டுமே நின்று சென்றன. மாவட்ட தலைநகரான ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் நிற்கவில்லை. இது அதிருப்தியை ஏற்படுத்தியது. சிவகங்கையில் ரயில் நின்று செல்ல கோரி எதிர்கட்சிகள், வர்த்தக சங்கம், பொதுநல அமைப்புகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சிவகங்கை ஸ்டேஷனுக்கு, நேற்று முன்தினம், முறையான உத்தரவு வந்துள்ளது. இதில், "நவ., 1 முதல் ஏப்., 1 ம் தேதி வரை, ரயில்கள் நின்று செல்லும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது

source : Dinamalar