Nagaratharonline.com
 
நாச்சியாபுரம் அருகே எரிந்த நிலையில் இளம் பெண்கள்  Oct 28, 10
 
நாச்சியாபுரம் அருகே இளங்குடி கண்மாயில், இரு பெண் உடல்கள், எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.காரைக்குடி- திருப்புத்தூர் ரோட்டில் இக்கண்மாய் உள்ளது. அங்குள்ள புதரில் பெண் உடல்கள் கிடப்பதாக வி.ஏ.ஓ., வீரபாண்டியன், நேற்று மாலை, போலீசில் புகார் செய்தார். ஒருவர் ஊதா நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். மற்ற உடைகள் முழுமையாக எரிந்து விட்டன. இவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இப்பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை; வெளியூரில் கொலை செய்யப்பட்டு, இங்கு எரித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரிக்கிறார்

source : Dinamalar