Nagaratharonline.com
 
பொன்னமராவதி அருகே குளத்தில் குளித்த 3 மாணவிகள் மூழ்கி பலி  Oct 26, 10
 
பொன்னமராவதி அருகே குளத்தில் குளித்த மூன்று பள்ளி மாணவிகள், நீரில் மூழ்கி இறந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆலவயல் பகுதியை சேர்ந்த பிரான் மகள் பார்வதி (10). பொன்னமராவதி அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் யோகேஸ்வரி (15). இவர் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். துரை மகள் பாரதி (10). ஐந்தாம் வகுப்பு படித்தார்.



இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து நேற்று காலை 10 மணியளவில் அப்பகுதியில் உள்ள பெரிய ஊரணி குளத்தில் குளித்தனர். மூன்று பேரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி இறந்தனர். மதியம் 12மணியளவில் பாரதியின் உடல் குளத்தில் மிதந்தது. இதைக்கண்ட பகுதி மக்கள் பொன்னமராவதி போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி தேடி மற்ற இரண்டு மாணவிகளின் உடலையும் கண்டுபிடித்தனர். மூன்று பேரின் உடல்களையும் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்னமராவதி போலீஸார் விசாரிக்கின்றனர். ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source : Dinamalar