Nagaratharonline.com
 
வலையபட்டி :மூதாட்டியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு  Oct 25, 10
 
பொன்னமராவதி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

வலையபட்டி மெய்யப்பசெட்டியார் வீதியில் வசிப்பவர் ம. வள்ளியம்மாள் (62). இவர் அருகே வசித்து வரும் தனது மகன் வீட்டுக்கு நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த தலா 5 பவுன் மதிப்புள்ள 2 தங்கச் சங்கிலிகளைப் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

இதுகுறித்து பொன்னமராவதி போலீஸôர் விசாரிக்கின்றனர்.

source : Dinamani