Nagaratharonline.com
 
சாய்பாபா சிலையில் விபூதி கொட்டியதால் பக்தர்கள் வியப்பு  Oct 17, 10
 
சேலத்தில் உள்ள சாய்பாபா கோவிலில், பாபாவின் சிலையில் இருந்து விபூதி கொட்டியதைப் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.சேலம் சூரமங்கலம் முல்லை நகரில், சீரடி சாய்பாபா கோவில் உள்ளது.இக்கோவிலில், விஜயதசமி நாளன்று பாபாவின் சமாதி நாள் விழா கொண்டாடப்படும்.நேற்று, சமாதி நாளையொட்டி பாபாவுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலில் "துனி' என்ற இடத்தில் அமைந்துள்ள சாய்பாபா சிலையில் இருந்து திடீரென விபூதி கொட்டியது. முதலில் சிலையில் கட்டியிருந்த டர்பனில் இருந்து வந்தது. தொடர்ந்து முகத்தில், காதில் இருந்து கொட்டிய விபூதி, சிலையின் மீது படிந்து காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்தனர். தகவல் பரவ, பொதுமக்களும் கோவிலுக்கு வந்து சாய்பாபாவை வணங்கிச் சென்றனர்.



இது குறித்து சாய்பாபா கோவில் டிரஸ்ட் நிர்வாகி மோகன் குறிப்பிடுகையில், "இங்கு மட்டுமல்ல, சாய்பாபா படங்களிலும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து


source : Dinamalar