Nagaratharonline.com
 
கல்லல் : சோமசுந்தரேசுவரர் கோவில் கோபுர கலசங்களை திருட முயற்சி  Oct 10, 10
 
கல்லல் : இங்கு சிவகங்கை தேவஸ்தானத் துக்கு சொந்தமான சோம சுந்தரேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபுரத்தில் 30 கலசங்கள் உள்ளன.

நேற்று நள்ளிரவு கோவில் முன்பு ஒரு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கோபுர கலசங்களை கொள்ளை யடிக்க நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீச பாண்டியன் கோவில் முன்பு சந்தேகப் படும்படி நின்று கொண்டி ருந்த 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கோவில் கோபுர கலசங்களை திருட முயன்றது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஜாகீர் உசேன் (37), செய்யது இபுராகிம் (42), ஆகீப் (24), ரமீஸ்கான் (45), மற்றொரு ஜாகீர் உசேன் (28), சுப்பிரமணி (33), இருளாண்டி (30), சின்னக் கருப்பன் (49). தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

source : Maalai malar