Nagaratharonline.com
 
சிவகங்கை : புதிய மருத்துவ கல்லூரிகளில் 2011 ல் மாணவர் சேர்க்கை:சுகாதாரத்துறை செயலர் தகவல்  Oct 5, 10
 
சிவகங்கை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் மருத்துவ கல்லூரிகளில் 2011 ல் மாணவர் சேர்க்கை துவங்கும்,'' என சுகாதார துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சிவகங்கையில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை அவர் ஆய்வு செய்தார். டிசம்பருக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.அவர் கூறியதாவது: இக்கல்லூரிக்கு 97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. டிசம்பரில் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) ஆய்வு செய்ய உள்ளது. வரும் 2011 ல் மாணவர் சேர்க்கை துவங்கும்.



source : Dinamalar