Nagaratharonline.com
 
செட்டிநாடு சேலை உற்பத்தி சரிவு  Oct 4, 10
 
காரைக்குடியில், மழையால் கைத்தறி நெசவு பாதிக்கப்பட்டு, செட்டிநாடு சேலை உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்புத்தூர், கோவிலூரில் 5,000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செட்டி நாடு சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள நகரத்தார் சமூகத்தினர் மத்தியில், இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. காரைக்குடிக்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குகின்றனர்.



தொழில் முடக்கம்: காரைக்குடியில் 1,200க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். ஒரு குடும்பத்தினர் மாதத்திற்கு 20 க்கும் மேற்பட்ட சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். சில நாட்களாக பெய்த கன மழையால் வீடுகளுக்குள் நீர் புகுந்து, தொழில் முடங்கியுள்ளது.



source : Dinamalar