Nagaratharonline.com
 
திருப்புத்தூர்: கார் மோதி முதியவர் பலி  Sep 29, 10
 
திருப்புத்தூர்: மதுரையைச்சேர்ந்தவர் லட்சுமணன் (64). இவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நச்சாத்தூரில் நடந்த உறவினர் திருமண விழாவிற்கு சென்றார். பின்னர் தனது மனைவி நாகம்மையுடன் காரில் மதுரை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். திருப்புத்தூர் அருகே கருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதியது. சம்பவ இடத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த நாகம்மை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரித்து வருகிறார்.

Source:Dinakaran