Nagaratharonline.com
 
நெற்குப்பை: பெயின்டர் குத்திக்கொலை தாய், தந்தை, மகன் கைது  Sep 29, 10
 
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பெயின்டர் கொலை வழக்கில் தாய், தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
திருப்புத்தூர் அருகே நெற்குப்பை வடக்கூரைச்சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் அண்ணாத்துரை (30). இவர் பெயின்டராக வேலை செய்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் மகன் முருகன் (30). வடக்கூர் கண்மாயில் தண்ணீரை வயலுக்கு பாய்ச்ச புதிய ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. கண்மாயிலிருந்து பாக்கியம் ஏற்கனவே அவரது வயலுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளார் என கூட்டத்தில் அண்ணாத்துரை புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாக்கியம் மகன் முருகனுக்கும், அண்ணாத்துரைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் கத்தியால் அண்ணாத்துரையின் மார்பில் குத்தினார். ஆபத்தான நிலையில் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்ணாத்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அவரது தந்தை பாக்கியம், தாய் வள்ளி ஆகியோரை கைது செய்தனர்.

Source:Dinakaran