Nagaratharonline.com
 
திருக்கோளக்குடி கோயிலில் பெüர்ணமி கிரிவலம்  Sep 24, 10
 
திருப்பத்தூர், செப். 23: திருப்பத்தூர் அருகே திருக்கோளக்குடி அருள்மிகு திருக்கோளநாதர், ஆத்மநாயகி அம்மன் கோயிலில் 118-வது பெüர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

கிரிவலத்துக்கு கணபதி தலைமை வகித்தார். முன்னதாக சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

கிரிவலம் மலையடிவாரத்தில் தொடங்கி ஈஸ்வரன், பிள்ளையார், பொன்னழகியம்மன், அய்யனார், ஐயப்பன், தேரடிக் கருப்பர் ஆகிய தெய்வங்களை வணங்கி மலை மீதுள்ள சிவாமி அம்பாளை ஏழுவித சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் பக்தர்கள் வழிபட்டனர்.

அபிஷேக, ஆராதனைகளை நமச்சிவாய பட்டர் நடத்தினார். பெüர்ணமி கிரிவலத்தில் திரளான பெண்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.


Source:Dinamani
24th sept 2010