Nagaratharonline.com
 
காரைக்குடி அருகே இடி தாக்கி கோபுரக் கலசங்கள் சேதம்  Sep 22, 10
 
காரைக்குடி, செப். 21: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அருள்மிகு திருநெல்லையம்மன் உடனுறை கொற்றவாளீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் செவ்வாய்க்கிழமை இடி தாக்கியதில் இரண்டு கலசங்கள் சேதமடைந்தன.

இக்கோயிலில் சில மாதங்களுக்கு முன்னர்தான் குடமுழுக்கு நடைபெற்றது.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடி, மின்ன லுடன் மழை பெய்துவருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. அப்போது கோவிலூர் கோயில் கிழக்கு ராஜகோபுரத்தை பலத்த இடி தாக்கியது. இதில், இந்தக் கோபுரத்தில் உள்ள 7 கலசங்களில் இரண்டு

சேதமடைந்தன. வேறு பகுதிகளில் சேதம் ஏதும் இல்லை என்று கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்

Source:Dinamani