Nagaratharonline.com
 
மேலச்சிவபுரி கணேசர் கல்லூரி பேராசிரியர் வீட்டில் பணம் கொள்ளை  Sep 14, 10
 
புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய கல்லூரி பேராசிரியரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, வெள்ளி பொருள், பட்டுப்புடவை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.புதுக்கோட்டை டவுன், பாரதிநகரைச் சேர்ந்தவர் திருஞானமூர்த்தி(50). இவர் பொன்னமராவதி அடுத்த மேலச்சிவபுரி கணேசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காமேஸ்வரி(45); இவர் பள்ளி ஆசிரியர்.இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளனர். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு, கதவு திறந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த வைரத்தோடு உட்பட 12 பவுன் நகை, மூன்று கிலோ வெள்ளி பொருட்கள், 35 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறு பட்டுப்புடவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் இருக்குமென கணக்கிடப்பட்டது.பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த கொள்ளையர்கள் கடப்பாறையால் ஜன்னல் கம்பிகளை வளைத்தபின் வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து கொள்ளையடித்து தப்பியுள்ளனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் நேற்று காலை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.


source : Dinamalar