Nagaratharonline.com
 
தேவகோட்டையில் திருக்குறள் கருத்தரங்கு  Sep 8, 10
 
தேவகோட்டை செப். 7: தேவகோட்டையில் திருக்குறள் கருத்தரங்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் திருக்குறளைப் பரப்பிய

ஆ.வி.க.காசிநாதரின் நினாவாக உள்ள காசிநாதர் அரங்கில் நடைபெற்ற முப்பதாமாண்டு விழாவுக்கு ஜமீன்தார் நாராயணன் செட்டியார் தலைமை வகித்தார்.

அருணாச்சலம் வரவேற்றார். திருக்குறளில் இல்லறம் என்ற தலைப்பில் பொற்கிழி கவிஞர் அரு. சோமசுந்தரன், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் வெங்கட்ராமன், பேராசிரியை சிவகாமி, முனைவர் திரிபுரசுந்தரி ஆகியோர் உரையாற்றினர். வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Source:Dinamani