Nagaratharonline.com
 
அங்கீகாரம் பெற்ற மனைகள் என்று போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம்  Sep 7, 10
 
அங்கீகாரம் பெற்ற மனைகள் என்று போலியான ஆவணங்களை காட்டு பவர்களை கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று திருச்சி கலெக்டர் சவுண்டையா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெறியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி நகரைச் சுற்றியுள்ள விமான நிலையம், திருவளர்ச்சிப்பட்டி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, எல்லக்குடி, திருவெறும்பூர், கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், சோமரசம்பேட்டை , நாச்சிக்குறிச்சி, வயலூர், சமயபுரம், கண்ணூர், மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை மனைகளாக பிரித்து பல தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

அவ்வாறு விற்பனை செய்யும் போது அரசின் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவுகள் என்று போலியான அவணங்களைக் காட்டி விற்பனை செய்து வருகிறார்கள். மனைப்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநகராட்சி ஆணையர்,நகராட்சி, ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் எவருக்கும் மனைகளை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

அப்படி ஏதேனும் ஆவணங்கள் காட்டப்பட்டால் அவை அனைத்தும் போலியானவை. எனவே அந்த ஆவணங்களை நம்பி மனைப்பிரிவுகளை வாங்குவோருக்கு ஏற்படும் பிரச்சினைக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

மேலும் அவ்வாறு மனைப்பிரிவுகளை விற்கும் தனியார் நிறுவனங்கள் அந்த நிலங்களை ஓட்டியுள்ள அரசு நிலங்களையும் சேர்த்து தங்களின் மனைப்பிரிவுகளை விற்பனை செய்வதாக தற்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மாவட்ட நிர்வாகத்தால் அவற்றை விசாரணை செய்து அந்த நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அவ்வாறு அரசு நிலங்களை போலி ஆவணங்களின் மூலம் மனைப்பிரிவுகளாக விற்பவர்கள் மீதும் அவற்றை வாங்குபவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே, நகர்பகுதிகளை ஒட்டிவீட்டு மனைப்பிரிவுகளை பொதுமக்கள் வாங்கும் போத உரிய கவனம் செலுத்தி வாங்க வேண்டும்.

source : Maalai Malar